திருநெல்வேலி மாவட்டத்தில் சீனாதானா அறக்கட்டளை பைத்துல்மால் பணிகள் தீவிரம்

Posted by Haja Mohideen (Hajas) on 12/3/2010

திருநெல்வேலி மாவட்டத்தில் சீனாதானா அறக்கட்டளை பைத்துல்மால் பணிகள் தீவிரம்

Posted By News On December 3, 2010 @ 5:42 am In [1]

      திருநெல்வேலி மாவட்டத்தில் சமுதாயப்புரவலர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களின் சீனா தானா அறக்கட்டளை சார்பிலான பைத்துல் மால்கள் கிராமங்கள் தோரும் அமைக்கப்பட்டு வருகின்றன. சமுதாயச்சேவை செய்யும் சமுதாய ஒளிவிளக்கு செய்யது அப்துல்காதர் அவர்கள் துபாய் ஈ.டி.ஏ.குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது சலாஹ_த்தீன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.       

     பொதுவாக தமிழகத்தில்  பொருளாதாரம்,கல்வி, வேலை வாய்ப்புக்களில் முன்னேற்றம் கண்டு வருகிற, முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்கிற ஊர்களான கீழக்கரை காயல்பட்டணம் அதிராம்பட்டினம்,லால்பேட்டை, மேலப்பாளையம்,பள்ளப்பட்டி,முத்துப்பேட்டை, போன்ற ஊர்களின் வளர்ச்சியில் பைத்துல்மால்களின் பங்களிப்பு அபரிமிதமானது.

     சாதாரண வருவாய் வாழ்வு கொண்டுள்ளவர்கள் மற்றும் நடுத்தட்டுவசதி கொண்டவர்கள், பல்வேறு வகைக் காரணங்களுக்காக வட்டிக் கடன் வாங்குவதற்குத்  தயக்கமே காட்டுவது இல்லை.

     பணம் கொடுத்து உதவ  நல்ல உள்ளம் கொண்ட  ஆட்களும், அமைப்புக்களும் இல்லாததால் அற்ப காரணங்களுக்காகஅல்லது  தேவைகளுக்காக முஸ்லிம்கள் வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாத்தில் வட்டி வாங்குவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல வட்டி கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.;.

     ஊருக்கு ஊர் வட்டிக்கடை மார்வாடிகளின் வேலைகளை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தொடக்கக் கூட்டுறவு வங்கிகளும் கவுரமான தொழிலாகவே செய்து வருகின்றன. ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு “அவர்களை விட கடனுக்கான எங்களது வட்டி சதவீதம் குறைவு” என்று கூவிக்கூவி வியாபாரம் செய்கின்றனர்.

     நாகரீகத்தின் வளர்ச்சியில் அல்லது ஒரு வகையான அபரிமிதமான வருவாயின் மதமதப்பில், தமது மணிப்பர்ஸில்; பல்வேறு நிறத்திலான கிரிடிட் கார்டுகள் துருத்திக் கொண்டிருப்பதை இளைய சமுதாயம் பெருமையாகவே காட்டிக் கொள்கிறது. 

    எது அவசியம் எது அனாவசியம் என்று பகுத்துப்பார்த்துப் பொருட்கள் வாங்கிய நிலை மலையேறி;விட்டது. கிரிடிட் கார்டு வந்த கோலம், ஆடம்பரம் தலைவிரித்தாடுகிறது. நகரத்தின் காபி கடைகளில் கூட கிரிடிட்கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற போர்டுகள் பளீரென மின்னுகின்றன.

  இதனால் ஒரு சாதாரண மேல்சட்டையே ரூபாய் மூன்றாயிரம் வரையில் வாங்குகிற தைரியம் வந்தவிட்டது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை: பையில் கிரிடிட் கார்டு தான் உள்ளதே என்று கடன் வாங்கும் துணிச்சல் கொண்டு தேவையற்றதையெல்லாம் வாங்கித் தள்ளுகிறார்கள். வங்கியில் பணம் இருப்பவனாயிருந்தால் தாங்கிக் கொள்வான். ஆனால் ஒன்றுமில்லாத ஆடம்பரப்பேர்வழிகளின் பாடு பரிதாபம் தான்.

     கிரிடிட்கார்டுகள் மூலம் பல்வேறு ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவித்து அதற்கான அசலும் வட்டியும் கட்டமுடியாமல் பரிதாபமாகத் தத்தளிப்பவர்கள் தாயகத்திலும்    வெளிநாடுகளிலும் கணிசமாக உள்ளனர்.

   கைப்பையிலேயே வட்டிக்காரனை, கந்து வட்டிக்குப் பணம் கொடுப்பவனை கிரிடிட் கார்டு வடிவில் உடன் வைத்துள்ளோம் என்பதை மறந்துவிட்டு,  பாதிப்புக்கள் வந்த பின்னரே தான் உணரத் தலைப்படுகிறார்கள்.பரிதவித்து அல்லாடுகிறார்கள். அதனால் நிம்மதி இழந்தவர்களை ஏராளமாகக் கேள்விப்பட முடிகிறது. இவ்வகைக் கடன் பெற்றவர்கள் இது பாழுங்கினறு என்று தெரிந்தே விழுந்துத் தத்தளிப்பவர்கள ஆவார்கள்;.  

   ஆடம்பரப்பிரியர்களுக்காக,அல்லதுஆனந்தப்பேர்வழிகளுக்காக பைத்துல்மால்கள்; ஏற்படுத்தப்படவில்லை.அவை சாமான்ய மக்களுக்காகவே தான்.

       சீனாதானா அறக்கட்டளை மூலம்    பல்வேறு ஊர்களில் பைத்துல்மால் அமைப்புக்கள் ஏற்படுத்தப்;பட்டுள்ளது..  குறிப்பாக   திருநெல்;வேலி மாவட்டம் தென்காசி வட்;டத்தில் தென்காசி நடுப்பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசல்,புதுமனை ஜூம்ஆ பள்ளிவாசல், கிதுரு ஒலி தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசல், .செங்கோட்டை தஞ்சாவ+ர் ஜமாஅத் ஜூம்ஆ பள்ளிவாசல்.,வீராணம் ஜூம்ஆ பள்ளிவாசல்,திருநெல்வேலி வட்டத்தில் மேலப்பாளையம் போன்றவற்றில்  பைத்துல் மால்கள்; அமைக்கப்பட்டு அதன்மூலமாக பல்வேறு தரப்பினருக்கும் வட்டியில்லாக்கடன்கள்; வழங்கப்பட்டு பயனாளிகள் பலன் பெற்று வருகிறார்கள்.

     இத்தகைய பைத்துல்மால்களில் மாணவ, மாணவியரின் படிப்பு வகைகளுக்கும், எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட அவசர மருத்துவ சிகிட்சைச்செலவுகள் போன்ற காரணங்களுக்கும்,சிறிய அளவில் தொழில் செய்ய முதலீடுகளுக்கும் பைத்துல்மால்கள் மூலம் வட்டியில்லாக்கடன்கள் வழங்கப்படுகிறது.

     சில ஊர்களின் பைத்துல்மால்களில் தருகிற பெருந் தொகையான வட்டியில்லாக்கடன்களுக்கு ஈடாக, அடமானமாகப் பொருட்கள் கேட்கும் முறையையும் வைத்துள்ளார்கள். அந்த வசதில்லாதவர்களிடம் ஊரிலுள்ள ஜமாஅத் தலைவர்,உறுப்;பினர் அல்லது யாராவது ஒருவர் ஜாமீன்தாரர்களாக இருந்தால் மிக எளிதாக வட்டியில்லாக் கடன் பெறுகிறார்கள். அது தர முடியாதவர்களிடம் எவ்விதமான நிபந்தனைகளுமின்றியும் கடன் வழங்குகிறார்கள்.

      ஜமாஅத் அல்லது அதன் தலைவர் சிபாரிசின் பேரில் தரப்படுகின்ற கடன்கள்; எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மீண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. முறையான ஜமாத் நிர்வாகம் இருந்து அதன் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிற காரணத்தால் ஜமாத் ஐக்கியம் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

    வேலை வாய்ப்புக்கள், தாய் நாட்டில் இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்லுகிற இளைஞர்கள் தமது வீடு வாசல்களை அடமானம் வைத்து, தமது வருவாய் அனைத்தையும் வட்டிக்காரர்களுக்கு கொடுத்துவருவதைத் தடுக்கவும்;, அசலும் வட்டியும் கட்ட முடியாமல் வீடுவாசல் நகை நட்டுக்களை இழக்கிற கொடுமையிலிருந்து  பாதுகாக்கவும்,விமான டிக்கட் ,விசா போன்றவை பெறும் வகைக்கும் பல்வேறு ஊர்களிலுள்ள பைத்துல்மால்கள் கடன் கொடுத்து உதவுகின்றன.
  இவை எல்லாவற்றிற்கும் மேலாக துன்பப்படும்ஆண்களை விட சமுதாயப்பெண்கள் மற்றவர்களிடம் சென்று தன்மானம் இழந்துவிடக்கூடாது என்பதில் சமுதாயப்புரவலர்கள் மிக்க கவலையுடன் இருக்கிறார்கள்.ஆகவே பைத்துல்மால்கள் ஊரெங்கும் ஏற்படுத்தப்படவேண்டும் பெண்மக்களுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டுமென்று மிக்க விரைவுடன் பைத்துல்மால் அமைப்புப் பணிகளை செய்துவருகிறார்கள்.

     மேலும் தமிழகத்தின் எந்த ஜமாஅத்தில் பைத்துல்மால் துவக்கிட எற்பாடு செய்தாலும் சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்கள் தலைவராக இருக்கும் (SEED)சீட் டிரஸ்ட்டின் சார்பாக ரூபாய் பத்தாயிரம் தரப்படுகிறது இதை மூலதனத்தோடு சேர்த்து வைக்கலாம்.ஜக்காத் கொடுப்பவர்களிடமிருந்து அவற்றை வசூல் செய்தும், குர்பானி தோல் வகைகளை விற்று கிடைக்கும் பணத்தையும் ஜமாத்துக்களின் முதலீடாக சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் மூலம் சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும்.அது தான் பைத்துல்மால்களின் குறிக்கோள்களாகும்.
   

சமுதாயப்புரவலர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களின் இவ்வகைப் பணிகளுக்கு தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்கள்,பொதுச் செயலாளர் காயல் அபுபக்கர்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான,; சீட் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர்; சமுதாயப் பிரமுகர் ஹிதாயத்துல்லா போன்ற பெருமக்கள் பக்கபலமாக இருந்துவருகிறார்கள்.
   திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு ஜமாத்துக்களில் பைத்துல்மால்கள் ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம்லீக் தலைவர் தென்காசி துராப்ஷா,மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், முன்னாள் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், தென்காசி தொழில் அதிபர் வி.டி.எஸ்.ஆர்.முஹம்மது இஸ்மாயில்,திருச்சி ராஜா ஹோட்டல்அதிபர்வீராணம் கமால்,செங்கோட்டை ரியாஸ்,அஸ்ரப் போன்றவர்கள்அடங்கிய குழுவினர் செய்து வருகிறார்கள்..

    இம்மாதிரி பைத்துல் மால்கள் போன்று சமுதாயத்தின் பல்வேறு தொழிலதிபர்களும். ஜமாத்துக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதனை சமுதாயத் தேவையாகக் கருதிச் செய்ய வேண்டும்.

    பைத்துல்மால்கள் அமைத்திட முஸ்லிம் லீக் முன்னணியினர் ஒவ்வொரு ஜமாத்திலும் முயற்சிக்கவேண்டும். முஸ்லிம் லீகின் சார்பாக அமைக்கப்பட உள்ள பைத்துல்மாலுக்கு ரூபாய் பத்து லட்சம் மூலதனமாக வழங்கப்படும்என்ற முஸ்லிம் லீகின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்கள் மேலப்பாளயத்தில நடந்த சமுதாய ஒற்றுமை மாநாட்டில் அறிவித்து அதை நடைமுறைப்படது;துவதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      பைத்துல்மால்கள் என்பவை  சமுதாயத்தை இணைக்கும் அன்புச்சங்கிலியாக இருக்கும்.ஒற்றுமையைப் பாதுகாக்கும். நம்மை அரவணைத்து அழகும் பார்க்கும்.

    புதியதோர் உலகம் செய்வோம். கெட்டவட்டிக்கடன்  தொல்லையெனும் கொடுமையிலிருந்து சமுதாய மக்களைக் காப்போம்.

மேலப்பாளையம் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன்
மாநில மாணவரணி அமைப்பாளர்
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்

9843064664

http://mudukulathur.com/?p=3470






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..